×

சோதனை முடிவுகளின் அடிப்படையில், அடுத்தாண்டு ஜூன் மாதம், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம் !

ஐதராபாத்: இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள கோவேக்சின் கொரோனா தடுப்பூசி, தற்போது 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கொரோனா வைரசுக்கான தடுப்பூசி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன. கோவேக்சின் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி, தற்போது 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது.   

மேலும், பரிசோதனைகளில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதம், தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளதாக, பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் சாய் பிரசாத் தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து, பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் சாய் பிரசாத் கூறுகையில்“ அவசர கால ஒப்புதலுக்கு மத்திய அரசு தயாராகலாம் என நான் நினைக்கிறேன். ஆனால் அதுபோன்ற ஒப்புதலுக்கு நாங்கள் முந்திச் செல்லவில்லை. அனைத்து விதமான பரிசோதனைகள் முடிந்த பின்னரே மருந்துகளை வெளியிட முடிவு செய்துள்ளோம். அனைத்தும் சரியானபடி நடந்தால் 2021-ல் ஜூன் மாதம் மருந்து வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Test, corona, vaccine
× RELATED கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான...