சென்னை: சென்னையில் பேருந்தில் பயணித்த கற்பகம்(45) என்ற பெண்ணிடம் இருந்து 13.5 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி பயணித்தபோது பெண்ணின் பையில் இருந்த நகையை திருடியுள்ளனர். திருட்டு குறித்து வடபழனி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.