ஆந்திரா: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,120 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 1,327 மில்லியன் கனஅடியாக இருந்த நீர் இருப்பு தற்போது 1,477 மில்லியன் கனஅடியாக உயர்ந்தது. சென்னை குடிநீருக்காக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 625 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.