காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் கெரன் பிரிவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று, பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி வந்த டிரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த டிரோன், சீனாவில் தயாரிக்கப்பட்டதற்கான முத்திரையை கொண்டிருந்தது. இதில் ஆயுதங்கள் எதுவுமில்லை. இதற்கு முன் பலமுறை ற எல்லை தாண்டி வந்த டிரோன்கள் சுடப்பட்டுள்ளது.