×

மண்ணடியில் பதுங்கி இருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது

தண்டையார்பேட்டை: கொல்கத்தாவில்  போதைப்பொருள் கடத்தலில்  தொடர்புடைய 4 பேர் சென்னை மண்ணடியில் பதுங்கியிருப்பதாக கொல்கத்தா  போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் மத்திய  போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னை   வந்து, மண்ணடியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 4 பேரை பிடித்தனர். விசாரணையில்  போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது  தெரியவந்தது. அவர்களை விமானம் மூலம் கொல்கத்தா அழைத்து சென்றனர்.

Tags : Drug smuggling gang , Drug smuggling gang arrested
× RELATED பெங்களூருவில் பிடிபட்ட போதை பொருள்...