தண்டையார்பேட்டை: கொல்கத்தாவில் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய 4 பேர் சென்னை மண்ணடியில் பதுங்கியிருப்பதாக கொல்கத்தா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து, மண்ணடியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 4 பேரை பிடித்தனர். விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை விமானம் மூலம் கொல்கத்தா அழைத்து சென்றனர்.