சென்னை: சேலம் களரம்பட்டி பண்டித நேரு தெருவில் பவித்ரா இண்டஸ்ட்ரீஸ் இயங்கி வருகிறது. இங்கு பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் மிஷின்கள் தயாரிக்கப்படுகிறது. இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் வி.சண்முகசுந்தரம் கூறியதாவது: அதிக திறன் வாய்ந்த இந்த நவீன இயந்திரங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டி தரும். நாங்களே அதி நவீன மிஷனையும் அதனை இயக்கும், பயிற்சியும் கொடுத்து தயாரிக்கும் மூல பொருட்களையும், டைகளையும் கொடுத்து தொழில் முனைவோர் தயாரிக்கும் பொருட்களை கொள்முதலும் செய்வதால் இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் அதிநவீன மிஷின்கள் மூலம் மாதம் ஒரு யூனிட்டுக்கு 30,000 முதல் 3 யூனிட்டுக்கு 90,000க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
கொரோனா காலத்தில் வாடிக்கையாளரின் பொருளாதார நெருக்கடியை தவிர்க்க பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் மிஷின்களின் மொத்த விலையில் பாதி தொகை செலுத்தி மிஷின் எடுத்துக்கொண்டு மீதி தொகையை தவணை முறையில் செலுத்த அதிரடி சலுகை அறிவித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.