×

கபீல் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழக அரசின் கபீல் புரஸ்கார்’ விருது பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சமுதாய மற்றும்  வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார்’ விருது, ஒவ்வொரு ஆண்டும், தமிழக முதல்வரால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது.  தமிழகத்தில் வசிக்கும் அனைவரும் (அரசு பணியாளர்கள் நீங்கலாக) இந்த பதக்கத்தை பெற தகுதியுடையவராவர். ஒரு சாதி, இனம், வகுப்பை  சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பை சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின்போதோ அல்லது தொடரும்  வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.  மூன்று பேருக்கு விருது வழங்கப்படும்.

கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள், அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட  மாவட்ட கலெக்டர் மூலமாக அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ அரசு முதன்மை செயலாளர், பொதுத்துறை,  தலைமை செயலகம், சென்னை என்ற முகவரிக்கு 14.12.2020-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.



Tags : Apply for the Kapil Puraskar Award
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...