மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பாஜ.வை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்நவிஸ், பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜ பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த சில நாட்களாக அங்கு அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டதால், கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இது பற்றி பட்நவிஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘டாக்டர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தி கொண்டு, சிகிச்சை ெபறுகிறேன், கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் ஓய்வின்றி உழைத்துக் கொண்டு இருக்கிறேன். நான் சிறிது ஓய்வு எடுக்க வேண்டும் என்று கடவுள் விரும்பியதால், எனக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம்,’ என்று கூறியிருக்கிறார்.