×

தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்: அரசு அரசாணை வெளியீடு.!!!

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை ,கடலூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்,

* காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம்.
* திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக மாற்றம்.
* மாநில நிதித்துறை இணை செயலாளர் அரவிந்த் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமனம்.

* பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா திருவாரூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம்.
* மாநில பட்டு வளர்ப்பு இயக்குநர் ஸ்ரீ வெங்கட பிரியா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.
* கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றம்.

* மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் சேலம் மாவட்ட பட்டு புழு வளர்ப்புத்துறை இயக்குனராக நியமனம்.  
* தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி கரூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம்.

* சென்னை கிராமப்புற மாற்றம் திட்ட தலைமை இயக்குநர் கார்த்திகா தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமனம்.
* தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் அஜய் யாதவ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளர் மாற்றம்.
* சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளர் சிவஞானம் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனராக மாற்றம்.

* திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், தமிழ்நாடு விவசாய இணை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : District Collectors ,Tamil Nadu ,Kanchipuram ,Tiruvallur ,Government , Transfer of various District Collectors in Tamil Nadu including Tiruvallur and Kanchipuram: Government Ordinance. !!!
× RELATED தமிழகத்தில் மணல் குவாரி வழக்கின்...