சென்னை: சென்னை ஐ.ஐ.டி. நுழைவாயில் அருகே நின்றிருந்த பெண்ணிடம் ரூ.80,000 மதிப்புள்ள செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. அழகு நிலைய பெண் பணியாளர் ஜெனி என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சென்னை அமைந்தகரையில் 17 வயது சிறுவனிடம் கழுத்தில் கத்தியை வைத்து செல்போன், பணம் பறிக்கப்பட்டது. சென்னை கே.கே.நகரில் அஜய் ராகவன் என்ற இளைஞரிடமும் மர்மநபர்கள் செல்போன் பறித்தனர்.