சென்னை: பண்டிகை காலத்திலும் பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைந்து உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.