×

மயிலாப்பூரில் முன்விரோதம் காரணமாக மர்ம கும்பலால் ரவுடி வெட்டிக் படுகொலை!!

சென்னை : சென்னை மயிலாப்பூர் முத்துகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் என்கின்ற பொட்டை மணி (27). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள முண்டக கன்னியம்மன் கோவில் சாலையில் இரவு 10.15 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, திருமலா ஃபுட்ஸ் கடையின் வாசலில் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் அவரை வழிமறித்து பயங்கர ஆயுதம் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மணிகண்டன் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக  இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் மயிலாப்பூர் போலீசார் இந்த கொலை வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் கொலை செய்யப்பட்ட மணிகண்டன் மீது 2 கொலை வழக்குகள் உள்ளது. அதேபோல், சில தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளி வந்தது குறிப்பிடத்தக்கது. மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய பகுதியில் நடைபெற்று இருக்கக்கூடிய  இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags : Rowdy Vettik ,gang ,Mylapore , Mylapore, hostility, mystery gang, rowdy, massacre
× RELATED மயிலாப்பூர் பங்குனி திருவிழாவில்...