×

செய்யும் தொழிலில் கவனம் செலுத்தி, பெற்றோரை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்: ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அட்வைஸ்!

சென்னை : மக்களுக்கான பணிகள்,  உதவிகளை தொடர்ந்து செய்ய தனது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். திருச்சியில் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நாளைய முதல்வர் விஜய் என்ற போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தன்னுடைய பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் சந்தித்தார். அதில் திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை தெற்கு, மதுரை வடக்கு, கன்னியாகுமரி ,கடலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர் , மகாராஷ்டிரா நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விஜய் ரசிகர் மன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய விஜய், ‘தேவையற்ற போஸ்டர்கள் எதுவும் ஒட்ட வேண்டாம். மக்களுக்கான பணிகள்,  உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள். உதவிகளை செய்யும் போது கடன் வாங்க வேண்டாம். நான் வழக்கம்போல் தொடர்ந்து உதவி செய்வேன்’ என்று மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் செய்யும் தொழிலில் கவனம் செலுத்தி, பெற்றோரை கவனமாக பார்த்துக் கொள்ளவும் விஜய் அட்வைஸ் செய்துள்ளார். அத்துடன் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு, உறுப்பினர் சேர்க்கை தீவிரம் குறித்தும் நிர்வாகிகளிடம் விஜய் பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் வலுப்படுத்துவது பற்றியும் அதன் மூலம் பல நலத்திட்டங்கள் செய்வது பற்றியும் விஜய் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Tags : parents ,Actor ,fans , Career, Fans, Actor, Vijay Advice
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...