சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கடந்த 18ம் தேதி முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி படுகாயமடைந்த பெண் உயிரிழந்தார். சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக சென்னை வந்த போது முதல்வரின் பாதுகாப்பு வாகனம் கார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சவுந்தரம் (64) என்ற பெண் உயிரிழந்தார்.