சென்னை: தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அளிப்பது குறித்து வரும் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார். தியேட்டர்கள் திறப்பு, சென்னை புறநகர் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்தது ஆலோசிக்கிறார். மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசிக்கிறார்.