×

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு: கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளுர்: விவசாயிகள் சொர்ணவாரி நெல் சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளனர். விவசாயிகள் பயன்பெறும் வகையில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவுப்படி 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களாக நாளிதழில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதாக வெளிவந்த செய்தியின் அடிப்படையில் மண்டல மேலாளர் அனைத்து நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முறைகேடுகளில் ஈடுபடும் நெல்கொள்முதல் ஊழியர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரித்துள்ளார்.


Tags : Direct Paddy Procurement Stations , Abuse at Direct Paddy Procurement Stations: Collector Warning
× RELATED லத்தூர் ஒன்றியத்தில் 3 அரசு நேரடி நெல்...