×

நில மோசடி விவகாரத்தில் நடிகர் சூரி புகார்: முன்னாள் டி.ஜி.பி முன்ஜாமீன் மனு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள வீரதீர சூரன் என்ற திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் சூரி நடித்துள்ளார். இதற்காக வழங்க வேண்டிய 40 லட்சம் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன், விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர். இந்நிலையில், அந்த நிலத்துக்காக அன்புவேல்ராஜனும், ரமேஷ் குடவாலாவும்  தன்னிடம் இருந்து 2.70 கோடியை கூடுதலாக பெற்று மோசடி செய்து விட்டதாக நடிகர் சூரி போலீசில் புகார் செய்தார்.  

புகாரின் அடிப்படையில் அன்புவேல்ராஜன், ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவிகளில் வழக்கு பதிவு செய்தனர்.  இந்த விவகாரம் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் போலீசார் தன்னை கைது செய்யக்கூடும் என்ற பயத்தில் ரமேஷ் குடவாலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் தசரா விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு வரவுள்ளது.



Tags : Suri ,hearing ,DGP ,ICC , Actor Suri complains about land scam: Former DGP's pre - bail petition
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...