×

சட்டசபை தேர்தல் வருவதால் இடஒதுக்கீடு கோரிக்கையை ராமதாஸ் வைத்துள்ளார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

ஏரல்: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா  அலுவலகம், குடியிருப்புக்கு புதிய கட்டிடம்  கட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் நடந்த பூமி பூஜையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு  வேண்டும் என்று  எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதே வலியுறுத்தி  வருகின்றனர். தேர்தல் வரும்போது இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்துவது  வழக்கம் என்பதால் ராமதாசும் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில்  மக்களவை தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும்  பாமக இருந்தது. அப்போது ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. அதிமுக தேர்தல் அறிக்கை வரும்போது ராமதாஸின் கோரிக்கையை இடம் பெறச் செய்வது குறித்து தலைமை முடிவு  செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Ramadas ,Kadampur Raju ,elections ,Assembly , Ramadas has demanded reservation as Assembly elections are coming up: Interview with Minister Kadampur Raju
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்