சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் வைரலான திருமாவளவன் பேசும் வீடியோ குறித்து பல்வேறு தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.