சென்னை: மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவது இயல்பானது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சுனாமி, கஜா புயலின் போது அரசின் நடவடிக்கைகளை கமல்ஹாசன் பிளாஷ்பேக்காக நினைத்து பார்க்க வேண்டும் எனவும், அரசின் திட்டங்களை விமர்சனம் செய்வது போல இலவச தடுப்பூசி குறித்தும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குறிப்பிட்டுள்ளார்.