கரூர்: தோகைமலை அருகே சிறுமையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெயராஜ் என்பவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெயராஜ் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதனையடுத்து கடத்தலுக்கு உதவிய மேலும் 10 பேருக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளனர்.