நாமக்கல்: எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஆனங்கூரில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், யாருடைய தவறான பிரச்சாரத்தையும் மின்சார வாரிய தொழிலாளர்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.