×

9 தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி : அதானி கேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் புதிதாக தொடக்கம்!!

சென்னை :மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று (23.10.2020) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் 1,298.20 கோடி ரூபாய் முதலீட்டில் 7,879 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்து,
10,062 கோடி ரூபாய் முதலீட்டில் 8,666 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்யவும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதன் காரணமாக, தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட 7 தொழில் நிறுவனங்கள் மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட 9 தொழிற் திட்டங்களின் விவரங்கள் பின்வருவமாறு:

வணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள்

1.    திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில், 600 கோடி ரூபாய் முதலீட்டில் 1,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், wheels india நிறுவனத்தின், வாகன சக்கரங்கள் மற்றும் சுரங்க உபகரணங்கள் உற்பத்தி திட்டம். இத்திட்டம்  உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

2.    காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொலைதொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 500 கோடி ரூபாய் முதலீட்டில் 5,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஃபின்லாந்து நாட்டை சேர்ந்த Salcomp நிறுவனத்தின், கைப்பேசி மின்னேற்றிகள் உற்பத்தி திட்டம். பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலைக்கு புத்துயிரூட்டி, அப்பகுதியில் தொழில் வளர்ச்சியை மேலும் சிறப்பாக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனே இத்திட்டம் ஆகும். இத்திட்டம்  உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

3.    திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில், 70 கோடி ரூபாய் முதலீட்டில் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், kalpathi ags குழுமத்தின் dindugal renerwable energy private limited (phase - 1) நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டம். இத்திட்டம்  உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

4.    இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில், 37 கோடி ரூபாய் முதலீட்டில் 90 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், power gear நிறுவனத்தின் மின் உபகரணங்கள் உற்பத்தி திட்டம்.

5.    காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், 12.7 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், mudhra fine blanc நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம். இத்திட்டம்  உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

6.    காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில், 56.5 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Nash industries india limited நிறுவனத்தின், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம். இத்திட்டம்  உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

7.    காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், 22 கோடி ரூபாய் முதலீட்டில் 39 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டினை சேர்ந்த BBl daido நிறுவனத்தின், shell bearings and pushings உற்பத்தி திட்டம். இத்திட்டம்  உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் விவரங்கள்

1.    காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டையில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், hundai motors  நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம்.  மேலும்  இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு எஸ்.எஸ். கிம் அவர்கள் hyundai motors india limited நிறுவனத்தின் சார்பாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொழிற்பூங்காவில் அமைக்கப்படவுள்ள புதுமை கண்டுபிடிப்பு மையத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார்.

2.    காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் 5,512 கோடி ரூபாய் முதலீட்டில், 4,738 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Vikram solar நிறுவனத்தின் solar module/ cell உற்பத்தி திட்டம். இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 27.7.2020 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

3.    திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் கிராமத்தில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், integrated chennai business park (Dp world) நிறுவனத்தின் logistic park திட்டம்.  இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுமுறைப்பயணமாக துபாய் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு திட்டமாகும்.  

4.    திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் 300 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், kalpathi ags குழுமத்தின் dindugal renewable energy private limited  (phase-2) நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டம்.  இத்திட்டம்  உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

5.    தூத்துக்குடி மாவட்டம், மேலக்கரந்தையில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், 228 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், shreevari energy systems  நிறுவனத்தின் காற்றாலை மற்றும் அனல் மின் உற்பத்தி துறைகளுக்கான தளவாடங்கள் உற்பத்தி திட்டம்.  இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 30.11.2019 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

6.    விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில், 50 கோடி ரூபாய் முதலீட்டில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Chennai ssss equipements நிறுவனத்தின் earth breaking equipements உற்பத்தி திட்டம்.  இதன் மொத்த வேலைவாய்ப்பில் 40 சதவீதம் பெண் பொறியாளர்கள் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

7.    திருப்பூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்,adani gas  நிறுவனத்தின் city gas distribution திட்டம்.  இத்திட்டம்  உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

8.    திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில், 600 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், philips carbon black நிறுவனத்தின் கார்பன் உற்பத்தி திட்டம்.  

9.    கோயம்புத்தூர் மாவட்டம், கள்ளப்பாளையத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், aquasub engineering நிறுவனத்தின் பம்புகள் உற்பத்தி திட்டம்.  இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 27.7.2020 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

Tags : Palanisamy ,Companies ,Adani ,Tamil Nadu , Industries, Foundation, Chief Palanisamy
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...