சென்னை: தொழிலதிபர் வி.கே.டி. பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தை குண்டுவைத்து கொல்ல முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது. 1985ம் ஆண்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள பாலசிங்கம் இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. வெடிகுண்டு வைக்கப்பட்டது தொடர்பாக வி.கே.டி. பாலன் உள்பட 7 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்தது.