×

ஆம்பூர் அருகே குடிநீர் கோரி நடந்த சாலை மறியலில் அமைச்சர் கே.சி.வீரமணியின் கார் சிக்கியது!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடிநீர் கோரி நடந்த சாலை மறியலில் அமைச்சர் கே.சி.வீரமணியின் கார் சிக்கியது. தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பாங்கி நகரில் 6 மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலை மறியலால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கே.சி.வீரமணியின் காரை முற்றுகையிட பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டனர்.


Tags : KC Veeramani ,road blockade ,Ambur , Ambur, drinking water, road block, Minister KC Veeramani, car stuck
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...