சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூபாய் 119.21 கோடி மதிப்பில் செங்கல்பட்டு, ரூபாய் 104 கோடியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது.