சென்னை: போதிய அளவில் வெங்காயம் இருப்பு இல்லாததால் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்த 2 நாட்களில் 20 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.45க்கு வெங்காயம் விற்பனை செய்யும் திட்டம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் மறுநாளே விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
வரத்து குறைவால் பல்லாரி வெங்காயம் விலை ரூ.130க்கு விற்பனையாகிறது. விலை அதிகரிப்பால் கிலோ கணக்கில் வாங்கியவர்கள் கிராமில் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழகத்திற்கு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து கடுமையான மழை காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வெங்காயம் வரத்து குறைய தொடங்கியுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சாதாரண நாட்களில் தினமும் 80 லாரிகளில் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது. இது தற்போது 40 லாரிகள் அளவுக்கு தான் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் அதிக அளவில் டேமேஜ் வேறு உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். வரத்து குறைவால் கடந்த மாதம் ரூ.25, ரூ.30 என்று விற்கப்பட்ட பல்லாரி வெங்காயம், தற்போது கிடுடுவென உயர்ந்து கிலோ ரூ.80, ரூ.90 என்று விற்பனையாகிறது. இதேபோல சின்ன வெங்காயம் ரூ.30க்கு விற்கப்பட்டது தற்போது இது ரூ.90 வரை விற்பனையாகிறது. இது மொத்த மார்க்கெட்டில் தான் இந்த விலை.