சென்னை: தி.மு.க. மண்டலங்கள் வாரியான 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. இன்று தெற்கு மண்டல தி.மு.க.நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தெற்கு மண்டலத்தில் கட்சி வளர்ச்சி குறித்து நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்.