×

பாஜ பிரமுகருக்கு கத்திக்குத்து

பெரம்பூர்: அயனாவரம் டி.பி.சண்முகம் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (41). அதே பகுதியில் பால் கடை நடத்தி வரும் இவர், வில்லிவாக்கம் தெற்கு பகுதி பாஜ பொருளாளராக உள்ளார். இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, அயனாவரம் பகுதியில் பேனர் வைத்துள்ளார். இதுதொடர்பாக, அயனாவரம் ரங்கநாதன் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சசிகுமாருக்கும் (30), இவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது, அந்த பேனரை சசிகுமார் கிழித்துள்ளார். இதுகுறித்து ஜெயக்குமார் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார், இருவரையும் அழைத்து பேசி பிரச்னையை முடித்து வைத்தனர்.

ஆனால், இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஜெயக்குமார், தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது,  அங்கு வந்த சசிகுமார், ஜெயக்குமாரை மறித்து தகராறில் ஈடுபட்டதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை 3 இடங்களில் குத்திவிட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜெயக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து  சசிகுமாரை கைது செய்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : BJP , Screaming at the BJP leader
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...