காஞ்சி: காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள மணவாள மாமுனிவர் சன்னதியில் தமிழில் திவ்யபிரபந்தம் பாட முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். வைணவ பெரியார் இராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டிலும் இக்கொடுமை தொடர்கிறது. இந்து சமய அறநிலையத்துறை என்ன செய்கிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.