கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரை கைது செய்யும் திட்டம் இல்லை என்று என்.ஐ.ஏ. தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் சிவசங்கரின் பெயரை சேர்க்கும் திட்டம் இல்லை எனவும் கொச்சி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அறிக்கை சமர்ப்பித்தது. இந்த நிலையில், முன்ஜாமின் கேட்டு சிவசங்கர் தாக்கல் செய்த வழக்கை கொச்சி நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.