சென்னை: மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்று முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். தொற்று தடுப்புப்பணியில் அரசு அதிகாரிகள் முழு அர்ப்பணிப்புடன், துரித நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 10,225 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.