சென்னை: சொன்னாலும் கண்டுகொள்வதில்லை, செய்யவும் மறுக்கிறார் என்று எடப்பாடி அரசு மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார் என தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்று வரும் நிலையில் அதிமுக அரசை ராமதாஸ் கடும் தாக்கி விமர்சனம் செய்துள்ளார்.