சென்னை: சென்னையில் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த ஆலோசனையில் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா பங்கேற்றுள்ளார். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த அக்டோபர் 20ம் தேதி பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி. அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், யு.ஜி.சி. உத்தரவை அடுத்து தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் அடுத்தது என்ன? என்பது பற்றி இந்த ஆலோசனையானது நடைபெறுகிறது.