புதுக்கோட்டை: தொழில்மயமான மாநிலங்களில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஐடிசி நிறுவனத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள ஆசிர்வாத் ஆட்டா தொழிற்சாலையை திறந்து வைத்து உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதியில் ஐடிசி நிறுவனம் தொழிற்சாலை தொடங்கியதில் மகிழ்ச்சியளிக்கிறது; பாராட்டுகிறேன் என்றார்.