சென்னை: புதிய கல்வி கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட அபூர்வா குழு மத்திய அரசிடம் அறிக்கை சமர்பித்தது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆராய தமிழக அரசு உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையிலான குழு அமைத்திருந்தது. தற்போது, அபூர்வா குழு மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், கல்லூரி படிப்பில் சேர நுழைவுத்தேர்வை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.