மும்பை: நடிகையும் பஞ்சாப் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தாவுக்கு 20ஆவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அவர் கொரோனா டெஸ்ட் குயின் என அழைக்கப்படுகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. தனது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆதரவு தெரிவிக்க நடிகை ப்ரீத்தி ஜிந்தா அமீரகம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.