சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர்கள் 2 பேர் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் நாகராஜ முருகன், பாட நூல் கழக செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். பாடநூல் கழக செயலாளராக பணியாற்றி வரும் லதா அங்கிருந்து ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் தவிர, திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி, சென்னையில் உள்ள ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநராக பதவி உயர்வின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.