×

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வாலிபர் வெட்டிக்கொலை: ஆட்டோ டிரைவருக்கு வலை

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் ரகு(24). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வினோதினி(21). ரகுவின் நண்பர் மைலாப்பூரை சேர்ந்த கார்த்திக்(21). அடிக்கடி நண்பர் ரகு வீட்டிற்கு வந்து செல்வார். அப்போது வினோதினியிடம் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கார்த்திக் வினோதினியை அழைத்துக்கொண்டு அவரது வீட்டில் தங்க வைத்துள்ளார். மனைவியை தேடி வந்த ரகு, கார்த்திக் வீட்டிலிருந்த வினோதினியை அழைத்துக்கொண்டு வந்துள்ளார். இதற்கிடையில், ரகு வீட்டில் இல்லாத சமயத்தில் கார்த்திக் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனையறிந்த ரகு, கார்த்திக்கை பலமுறை எச்சரித்துள்ளார்.

தொடர்பு நீடிக்கவே ஆத்திரமடைந்த ரகு தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கார்த்திக்கை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு கார்த்திக் கண்ணகி நகர் பகுதிக்கு வந்ததை அறிந்த ரகு தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்து கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். இதில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின்பேரில் கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீனா(19), ஜெயராஜ்(19) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரகு உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

Tags : auto driver , Woman murdered for having illicit affair with wife: web for auto driver
× RELATED குன்றத்தூர் அருகே லோடு ஆட்டோ டிரைவர்...