×

ஆற்றில் குதித்த இன்ஜினியர் உயிருடன் மீட்பு

சென்னை: கோட்டூர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், முதல்நிலை காவலர் சுப்பையா சுரேஷ், ரோந்து வாகன ஓட்டுனர் ஆயுதப்படை காவலர் பிரசாந்த் சக்தி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கோட்டூர்புரம் அடையாறு ஆற்றின் மேம்பாலத்தின் அருகே நேற்று அதிகாலை 3 மணி அளவில் ரோந்து வந்தபோது, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
3 போலீசாரும் வாலிபரை உயிருடன் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.விசாரணையில், கோட்டூர்புரம் ஸ்ரீதர் சாலையை சேர்ந்த விஷ்ணுவர்மன்(25) என்று தெரியவந்தது. பொறியாளரான இவர், வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

Tags : Engineer ,river , Engineer alive after jumping into river
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...