×

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கால்வாயில் இறங்கி வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள்: வைரலாகும் வீடியோ காட்சி

புழல்: செங்குன்றம் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. ஜி.என்.டி.சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மழைநீருடன் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. திமுக அலுவலகம் அருகில் உள்ள கால்வாயை பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் எந்தவித உபகரணம் இல்லாமல் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்கின்றனர். இது குறித்த வீடியோ முகநூல், வாட்ஸ்அப்  உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தூய்மைப் பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உகரணங்களும் இல்லாமல் உயிரை பனையம்வைத்து கழிவுநீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்வது அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Cleaning workers ,canal , Cleaning workers working down the canal without safety equipment: viral video display
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...