கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே குப்பாங்குளம் கிளாரட் பகுதியை சேர்ந்த வக்கீல் காமராஜிக்கும் (40), உறவினரான ராஜவேலுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் காமராஜ், நண்பர் சக்திவேலு (35) ஆகியோரை படுகொலை செய்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக நாச்சியார்கோவில் போலீசார் 4பேரை கைது செய்தனர். பிரச்னையை முதலிலேயே தீர்த்து வைக்காது பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி நாச்சியார்கோவில் இன்ஸ்பெக்டர் ரேகாராணியை, சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ் குமார்மீனா நேற்று உத்தரவிட்டார்.