×

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்ந்த வழக்கில் பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

லண்டன்: இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று கூறி பல்வேறு நாடுகள் அந்த அமைப்பினை தடை செய்திருக்கின்றன. இங்கிலாந்து, இந்தியா உளப்பட பல்வேறு நாடுகளில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசு சார்பாக இந்த தடையை நீக்க கோரி இங்கிலாந்தில் இருக்க கூடிய பிரிட்டன் நீதிமன்றத்தில் ஒரு வழக்கானது தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது ஜூலை மாதம் 29, 30 ஆகிய இரு தேதிகளில் மூடப்பட்ட நீதிமன்றத்திலும், அதேபோல திறந்த நீதிமன்றத்திலும் விசாரணையானது நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நேரப்படி காலை 10.30 மணி அளவில் இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் விடுதலை புலிகள் மீதான தடை நீக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டன் அரசால் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது நீக்கப்பட்டு விதிக்கப்பட்ட அந்த தடை செல்லாது என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இந்த விடுதலை புலிகள் அமைப்பை பொறுத்தவரையில் அந்த அமைப்பு பிரிட்டனில் எந்தவிதமான நாச செயல், அல்லது எந்தவிதமான தீவிரவாத செயல்களிலும் ஈடுபடவில்லை. எனவே இந்த தடை நீக்கப்படுவதாக பிரிட்டன் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது.


Tags : UK ,LTTE , UK court lifts ban on LTTE in UK
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது