×

பிறந்த நாள் பார்டிக்கு வருவதாக கூறி நடிகைக்கு பாலியல், கொலை மிரட்டல் : மகாராஷ்டிராவில் வாலிபர் கைது

மும்பை: பிறந்த நாள் விருந்துக்கு வருவதாக கூறி நடிகைக்கு பாலியல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்த மகாராஷ்டிரா வாலிபரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் அஹ்மத் நகரை சேர்ந்த சந்தீப் வாக் (28) என்பவர், திரைப்பட நடிகை ஒருவருக்கு பாலியல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி மும்பை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து ஓஷிவாரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தயானந்த் பங்கர் கூறுகையில், ‘கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்ட சந்தீப் வாக், மராத்தி திரைப்பட நடிகையிடம் தனது செல்போனில் அழைத்து பேசியுள்ளார். அப்போது, நடிகையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளலாமா? என்று கேட்டார். அந்த விருந்தில் பங்கேற்க குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று நடிகை தெரிவித்துள்ளார்.

அப்போது, சந்தீப் கட்டணம் செலுத்த முடியாது என்றும், தான் வருவதை தடுத்தால் போதைப்பொருள் விநியோக வழக்கில் சிக்கவைப்பதாகவும் மிரட்டி உள்ளார். அதற்காக போதைப் பொருள்களை விருந்து நடக்கும் இடத்திற்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பாலியல் பலாத்காரம் செய்துவிடுவதாகவும், மறுத்தால் கொலை செய்துவிடுவதாகவும் நடிகைக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த நடிகை போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் சந்தீப் வாக் தன்னை தொலைபேசி மூலம் அழைத்து துன்புறுத்தியதாகவும், தனது செல்போன் எண்ணை மாற்றியும் கூட, அந்த எண்ணை கண்டுபிடித்து மீண்டும் போனில் அழைத்து மிரட்டல் விடுவதாகவும் கூறியுள்ளார். சந்தீப் வாக் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிந்து அவர் கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிப்புக்கு உள்ளான நபர்கள் குறித்த விபரங்ளை வெளியிட ேவண்டாம் என்று உச்சநீதிமன்ற கூறியுள்ளதால், நடிகை குறித்த விபரங்கள் வெளியிட முடியாது. பாதிக்கப்பட்டவரின் அடையாளம் அவரது தனியுரிமையை பாதித்துவிடக் கூடாது’ என்றார்.

Tags : Actress ,death ,birthday party ,Maharashtra , Birthday party, sex with actress, death threats, teenager arrested
× RELATED நடிகை குஷ்புவை கண்டித்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்..!!