×

கச்சேரிக்கு போன பாடகியை பலாத்காரம் செய்த உத்திரபிரதேச எம். எல். ஏ.,அவரது மகன் மற்றும் உறவினர்!!

லக்னோ : உத்திரபிரதேசத்தில் 30 வயது பெண்ணை ஒரு எம் .எல். ஏ. மற்றும் அவரின் குடும்பத்தினர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகாரளித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் நிஷாத் கட்சியின் எம்.எல்.ஏ விஜய் மிஷ்ரா. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக எம்எல்ஏவாக தேர்வாகி வரும் அவரது வீட்டில், கடந்த 2015ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதற்கு வரும்படி பாடகி ஒருவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதன்படி நிகழ்ச்சிக்கு வந்த அந்தப் பாடகியை எம்எல்ஏ மிஷ்ரா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன்பின் மிஸ்ராவின் மகன் மற்றும் மற்றொரு நபரும் பாடகியை வன்கொடுமை செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். ஹோட்டல் ஒன்றில் வைத்து எம்எல்ஏ வன்கொடுமை செய்துள்ளார். பிறகு பாடகியை வீட்டில் விடச் சொல்லி அவரின் மகனை அனுப்பியபோது, அவரும் அவரின் உறவினரும் வன்கொடுமை செய்துள்ளனர்..

2015ல் நடந்த இந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக எம்எல்ஏ மிரட்டி வந்ததால் வெளியில் கூறவில்லை என்று இதுபற்றி 25 வயது கொண்ட அந்த பாடகி கோபிகஞ்ச் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரின் புகாரை ஏற்று போலீசார் எம் எல் ஏ குடும்பத்தினர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர் . மேலும் புகாரளித்த அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Tags : singer ,MLA ,Uttar Pradesh ,concert ,cousin ,L.A. , Rape, Uttar Pradesh, m. L. A.
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்