×

பழநியில் பூனைக்குட்டியை விழுங்கிய நாகம்: நகர முடியாமல் மயங்கியது

பழநி: பழநியில் பூனைக்குட்டியை விழுங்கி மயங்கிய கோதுமை நாகத்தை தீயணைப்புத்துறையினர் உயிருடன் பிடித்தனர். பழநி புறநகர் சிவகிரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மதுராநகரில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தின் மோட்டார் அறையில் கோதுமை நாகம் இருந்துள்ளது. இதுகுறித்து ஜெயக்குமார் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு தீயணைப்புப்படையினர் விரைந்தனர். அங்கு பூனைக்குட்டி ஒன்றை விழுங்கி மயங்கிய நிலையில் இருந்த சுமார் 4 அடி நீளமுள்ள கோதுமை நாகத்தை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்தனர். பிடிக்கப்பட்ட கோதுமை நாகம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் கோதுமை நாகத்தை அடர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

Tags : kitten ,Palani , Palani, cat, snake
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை