×

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!

சென்னை  : சென்னை அணியிலிருந்து ஆல்ரவுண்டர் பிராவோ காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் எனப் பலராலும் கணிக்கப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால், நடந்து முடிந்த 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்று 6 புள்ளிகளோடு 8-ம் இடத்தில் உள்ளது சென்னை. எட்டாம் இடத்தில் உள்ள ராஜஸ்தானும் 6 புள்ளிகள்தான். ஆனால், நெட் ரன்ரேட் அடிப்படையில் சற்று முந்தைய இடத்தில் உள்ளது சென்னை.

இந்த நிலையில் சென்னை அணியிலிருந்து ஆல்ரவுண்டர் பிராவோ காயம் காரணமாக விலகியுள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியபோது பந்து வீசிய பிராவோ காயம் அடைந்தார். அதனால்தான் போட்டியின் இடையில் ஓய்வெடுக்க சென்றுவிட்டார். அப்போட்டி முடியும் வரை அவர் திரும்ப வில்லை. அதனால்தான் இறுதி ஓவரை ஜடேஜா வீச டெல்லி எளிதாக வென்றது. ஒருவேளை பிராவோ கடைசி ஓவரை வீசியிருந்தால் சென்னை வென்றிருக்க வாய்ப்பிருந்தது அல்லது டெல்லிக்கு கடும் நெருக்கடியையாவது கொடுத்திருப்பார். இந்த நிலையில் காயத்தால் எஞ்சிய போட்டிகளில் பிராவோ விளையாட மாட்டார் என்று சென்னை அணி சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியது, பிராவோ இனி நடைபெறும் போட்டிகளில் விளையாடமாட்டார். காயம் காரணமாக பிராவோ அவதிப்படுவதால் அவர் வெஸ்ட் இண்டீஸ் திரும்புகிறார். இன்னும் ஓரிரு நாளில் அவர் சொந்த நாட்டுக்கு சென்றுவிடுவார். ரெய்னாவும், ஹர்பஜன் சிங் ஆகிய இருவரையும் சிஎஸ்கே மிஸ் செய்கிறது. ஆனால் ஒரு வீரரின் தனிப்பட்ட முடிவை நாம் மதிக்க வேண்டும். அதில் மூத்த வீரர், இளம் வீரர் என்று பாகுபாடு காட்டக் கூடாது, என்றார்.

Tags : all-rounder ,Chennai Super Kings ,Bravo ,IPL , Chennai Super Kings team, injury, IPL, cricket, all-rounder, Bravo, disqualification
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...