×

திருத்துறைப்பூண்டி அருகே பாராக மாறிவரும் பேருந்து நிழற்குடை: பயணிகள் அச்சம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே பாராக மாறிவரும் நிழற்குடையால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன்கோட்டகம் ஊராட்சி வடபாதி - பாண்டி ரோட்டில் பேருந்து நிழலகம் உள்ளது. இதில் பொதுமக்கள் அமர்ந்து பயணம் செல்ல முடியாத அளவிற்கு மது பிரியர்கள் அமர்ந்து குடித்துவிட்டு மதுபாட்டில்கள், சோடா, பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள் அங்கேயே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். தற்போது இந்த பேருந்து நிழலகம் மதுபான பாராக மாறி வருகிறது. இதனால் பொதுமக்கள் பேருந்து நிழலகத்தில் உள்ளே செல்ல முடியாமல் வெளியில் நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் பொதுமக்கள் பேருந்து நிழலகத்தில் அமர்ந்து பயணம் செய்ய முடியவில்லை. எனவே நிலழகத்தை பாராக மாற்றி வரும் மது அருந்துபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bus umbrella ,bar ,Thiruthuraipoondi ,Passengers , Thiruthuraipoondi, bus stop
× RELATED பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு