கடலூர்: கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் நாளைக்குள் பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளைக்குள் பணத்தை திரும்பி செலுத்தாவிடில் அரசின் அனைத்து சலுகைகள் திட்டங்களை நிறுத்தப்படும். கடலூர் ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் மோசடிக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.