×

வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர்: கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வௌியிட்ட அறிக்கை: நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை வரை ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு அங்கு தொடர் மழை இருப்பின் இந்த தண்ணீர் அளவு உயர்த்த வாய்ப்புள்ளது. இந்த தண்ணீர் நள்ளிரவில் பள்ளிப்பட்டு பாலத்தை கடந்து இன்று காலை நல்லாட்டூர் அணைக்கு வந்து சேரும்.

எனவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்படுகிறது. மேலும் இத்தகவலை வருவாய்துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Flood risk warning
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...